காஞ்சிபுரம் ஸ்ரீ கருக்கினில் அமர்ந்தவள் ஆலயத்தில் லட்ச தீப திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.


காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் தெருவில் அமைந்துள்ள காஞ்சி கிராம தேவதையாக விளங்கிவரும் கருக்கினில் அமர்ந்தவள் ஆலயத்தில் பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமை ஒட்டி லட்சிய தீப விழா விமர்சையாக நடைபெற்றது இதில் மூலவர் அம்பாளுக்கும் உற்சவர் அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமை லட்சதீப விழா இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது விழா ஏற்பாடுகளை ஆலய பரம்பரை தர்மகத்தா சார்பில் சிறப்பாக செய்யப்பட்டது.

முன்னாள் கோவில் பரம்பரை தாக்கர்த்தா தெய்வத்திரு. C.T.M.பள்ளிக்கூடத்தார் முதலியார் குமாரர் முன்னாள் பரம்பரை தர்மகர்த்தா தெய்வத்திரு.C.T.M.அப்பாராவ் முதலியார்,
C.T.M.P.பன்னீர்செல்வம் முதலியார் மகன்கள் இன்னாள் கோயில் பரம்பரை தர்மகர்த்தா P.R.பழனிராஜன் மற்றும் குடும்பத்தினர்கள் P.சுந்தர்ராஜன்,
P.திருஞான சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *