காட்டுமன்னார்கோயில் தொகுதியில் பானை சின்னத்திற்குs திருமாவளவன் தீவிர பிரச்சாரம்

புரட்சியாளர் அம்பேத்கர் விரும்பிய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் இன்று கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வீராணநல்லூர் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்

முன்னதாக சட்ட மாமேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவம் முன்னால் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், கருணாகரநல்லூர், அறந்தாங்கி மாமங்கலம் கொண்ட சமுத்திரம் வடக்கு பாளையம் சோழத்தரம் குமாரக்குடி கானூர் நாச்சியார் பேட்டை திருமுட்டம் கள்ளிப்பாடி ஆகிய பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது கருணாகநல்லூரில் பேசிய அவர், புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று அவர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தையும், அவர் விரும்பிய சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்

உடன் கடலூர் மாவட்ட திமுக கழக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் சூ க விடுதலைச் செடியின் திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய கழக செயலாளர் முத்துசாமி நகர கழக செயலாளர்கள் கணேசன் மூர்த்தி விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் எல் கே மணவாளன் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி தொகுதி துணை செயலாளர் சக்திவேல்ராவணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் கமல் மணிரத்தினம் ஊராட்சி மன்ற தலைவர் அரச பாண்டியன் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *