காட்டுமன்னார்கோயில் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் நீலமேகம் அவர்களை ஆதரித்து காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும், பெருந்தலைவர் ஐயா எல் இளைய பெருமாள் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் வாக்குகள் கேட்கப்பட்டது.

உடன் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை,
காட்டுமன்னார் கோயில் தனி சட்டமன்றத் தொகுதி பொதுச் செயலாளர் குமராட்சி பாலு.

தொகுதி தலைவர் சுகுமார், மாவட்ட நிர்வாகிகள் சிவப்பிரகாசம் அஜித்குமார் அரியலூர் மாவட்ட செயலாளர் உமாநாத் கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வித்யா ராஜசேகர் மற்றும் பகுதி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *