தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
கோரிக்கை…
இந்திய பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், நாளை மறுதினம் (ஏப்ரல்-19) முதல் கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தலாக நடைபெற உள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி களிலும் வாக்குப் பதிவு அலுவலர்களாக பணிபுரியக்கூடிய அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் ஒதுக்கீடு செய்துள்ள நிதியை முழுமையாக பயன்படுத்தி அடிப்படை வசதிகளை எவ்வித குறைபாடுமின்றி செய்து தர தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை வைத்துள்ளது.
நாளை மறுதினம் தமிழகத்தில் ஒரே கட்டமாக இந்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு நாளைய தினமே (ஏப்ரல்-18) வாக்குச்சாவடிகளில் பணி புரியக்கூடிய வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று பணியாற்ற உள்ள நிலையில், அவர்கள் பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடிக்கு சென்று வருவதற்கான வாகன ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அடிப்படை வசதிகளாக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, காற்றோட்ட வசதி, இரவு நேரத்தில் பெண் ஆசிரியர்கள் வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள், போதுமான அளவிற்கு மின்விசிறி வசதி மற்றும் மின்விளக்கு வசதி ஆகியவற்றை தமிழகத் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி களுக்கென ஒதுக்கீடு செய்துள்ள
ரூ 8.8கோடியை முழுமையாக பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட கிராமநிர்வாக அலுவலர்கள் எவ்வித குறைபாடுமின்றி செய்து தர உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டுமென தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியையும், மதுரை மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலரையும் மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர்பெ. சீனிவாசகன் கேட்டுக்
கொண்டுள்ளார்.