செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு முறைமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார்.
வட்ட சட்டப் பணிக்குழு நிர்வாக உதவியாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வட்ட சட்டப் பணிக்குழு வழக்கறிஞர் சா.இரா. மணி பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு முறைமைகள் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான செயல்பாடுகள் ஏற்பட்டால் 1091 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகளை பெறலாம் என்று வலியுறுத்தினார்.
மேலும் ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர்கள் நடராஜன், கன்னி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்.