சி.கே.ராஜன்
கடலூர் மாவட்ட செய்தியாளர்
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை.
திமுக மாவட்ட பிரதிநிதி ராமு,திமுக ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம் உட்பட ஐந்து பேர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.
கோபிசெட்டி தெருவில் குடியிருக்கும் மேயர் சுந்தரி ராஜா வீட்டில் பணம் பட்டுவாடா நடப்பதாக வருமானவரித்துறை மற்றும் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் மேயர் வீட்டிற்கு விரைந்து உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர் அதில் 2 லட்சம் மட்டும் பிடிபட்டன 2 லட்சத்திற்கான உரிய ஆவணம் இருந்ததால் சோதனையை கைவிட்டனர் இதனால் அப்பகுதி பரபரப்பானது