தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மணிக்கு தொடங்கியது. திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1743 வாக்குசாவடி மையங்களிலும் வாக்கு பதிவு துவங்கியது. காலை 7 மணிக்கே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் ஜமாலிய உதவி துவக்க பள்ளியில் தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.M.முருகன் தனது குடும்பத்தினருடன் சென்று தங்களது வாக்கினை பதிவு செய்தார்கள்.

இதேபோல் தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோன்று திருக்கடையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திமுக செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார் தனது வாக்கினை பதிவு செய்தார். அங்கும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *