காஞ்சிபுரம்

செந்தமிழ் செல்வர்-முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.*

செந்தமிழ்செல்வர்- முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் உள்ள காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் கழக மாணவரணி செயலாளரும்
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன்,பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *