“உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்…
“தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர்தான் எனக்கு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது….”
“சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழ்நாடு அரசுக்கு குகேஷ் நன்றி…
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று தாயகம் திரும்பிய தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீரர் குகேஷுக்கு இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….
இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அவர் படித்து வரும் பள்ளி சார்பில் மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குகேஷ் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது எனக்கு சிறப்பான சாதனை என்றும் கேண்டிடேட்ஸ் தொடரில் 7 சுற்றில் தோல்வி அடைந்தது என்னை பாதித்தாலும் அதிலிருந்து வெளியேறி இந்த தொடரை கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என நம்பிக்கையுடன் விளையாடினேன். செஸ் போட்டியை பொதுமக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்….
மேலும் பேசிய அவர் தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர்தான் எனக்கு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது. இந்த தொடரை நடத்திய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
விஸ்வநாதன் ஆனந்த் என்னுடைய ரோல் மாடல் என்றும் அவர் வழங்கிய ஆலோசனைக்கு நன்றி தெரிவித்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா வீரர் டிங் லிரென் வலிமையான வீரர் என்றும் உலக சாம்பியன்ஷிப் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றார்…