வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் அருகே இயற்கை விவசாய பயிற்சி நடைபெற்றது.
திண்டுக்கல் வட்டாரம், வெள்ளோடு ஊராட்சி, நரசிங்கபுரம் கிராமத்தில் பிரண்ட்ஸ் ஆப் பார்மர் டிரஸ்ட் மூலம் இலவச பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சுரேஷ் மற்றும் கவுசல்யா கலந்து கொண்டனர். மேலும் இயற்கை விவசாய ஆலோசகர் குமார் கலந்து கொண்டு, தென்னை மரத்தை தாக்கும் காண்ட மிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு கட்டுப்படுத்தும் முறை பற்றி எடுத்து கூறினார்.
மேலும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான இயற்கை இடுபொருள் பஞ்ச காவியா, மீன் அமிலம், கோ பூஸ்டர், ஜீவா அமிர்தம் மற்றும் பூச்சிகள் விரட்ட 5 இலை கரைசல், இஞ்சி, பூண்டு மிளகாய் கரைசல் பற்றி தொழில் நுட்ப செய்தி வழங்கினார்.
கலந்து கொண்ட 30 விவசாயிகளுக்கு EM கரைசல், மஞ்சள் வண்ண ஓட்டும் பொறி டிரஸ்ட் மூலம் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி மற்றும் முருகவேல் ஏற்பாடு செய்தனர். டிரஸ்ட் உறுப்பினர் கவுசல்யா நன்றி கூறினார்.