இலக்கியம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இலக்கியம்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் மற்றும் நீர் மோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூக்கடை. ரவி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, இலக்கியம்பட்டி கிளை செயலாளர் ஹாலோ பிளாக் மணி, நம்பர் மணி, வார்டு உறுப்பினர் இளங்கோ, இலக்கியம்பட்டி இளைஞர் ராம்குமார், சக்திவேல், கணேஷ் , அச்சுதன், பிரவீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.