தர்மபுரியில் இருந்து அரூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள், தண்ணீர் ஊற்றாமல் பராமரிப்பின்மையால் கருகி வருகின்றன.

தர்மபுரி – திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று முதற்கட்டமாக தர்மபுரி முதல் அரூர் வரை தற்போது தார் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. பொதுமக்கள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக சாலையின் இரு புறங்களிலும் மற்றும் நடுப்பகுதியிலும் சென்டர் மீடியன் அமைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

தற்போது கோடை வெயில் நிலவி வருவதால் கடுமையான வெப்பம் காரணமாக மரக்கன்றுகள் தண்ணீர் இல்லாமல் பராமரிப்பின்றி வளர்ச்சி அடையாமல் காய்ந்து கருகி வருகிறது.

மரக்கன்றுகளை நாங்களும் பராமரித்து வருகிறோம்? என்ற போர்வையில் தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினர் கண்துடைப்புகாக டிரக்டர்கள் மூலம் சிறிதளவு தண்ணீரை மர கன்றுகளுக்கு விட்டு செல்கின்றனர்.

எனவே மரச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளை வளர்க்க கூடுதல் கவன செலுத்த வேண்டும் இருக்கும் மரக்கன்றுகளை யாவது பராமரிக்க வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *