காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்டலத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் சாலையை கடக்கும் போது ஸ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கள் பகுதியை சேர்ந்த ராஜேஷ் பூந்தமல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்

விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இரு சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்

மேலும் விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்டலம் பகுதியில் சாலையை கடக்க ஒரு குறிப்பிட்ட இடைவெளியை மட்டும் பயன்படுத்தியதாகவும் முக்கியமான இடைவெளி தடுப்பு போட்டு மூடப்பட்டதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது

இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *