திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பட்டு ஊராட்சியில் நேற்று இரவு இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் ஐந்து பேர் காயம்
புதுப்பட்டு ஊராட்சியில் பலதரப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வரும் நிலையில் காலணி பகுதியை கடந்த செல்லும்போது ஊர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில் நேற்று இரவு அவ்வழியாக லாரியில் சென்ற ஊர் பகுதியை சேர்ந்த முரளி என்ற நபர் லாரியை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது ஏன் இந்த பகுதியில் அதிவேகமாக செல்கிறீர்கள் என காலனி குடியிருப்பு வாசிகள் கேட்டதற்கு இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் இருவரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் லாரி கண்ணாடி உடைந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த ஊர் பகுதி இளைஞர்களும் காலனி பகுதிய இளைஞர்களும் மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழியில் தலைமையிலான போலீசார் 50க்கும் மேற்பட்டோர்க்கு தகராறு ஏற்பட்டால் அவர்களை அப்புறப்படுத்தி தகராறில் காயமடைந்த ஐந்து பேரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்
பின்னர் சம்பவம் குறித்து செங்கம் போலீசார் இரு தரப்பிலிருந்தும் 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாகனம் இயக்குவதில் ஏற்பட்ட தகராறில் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்ததாக கூறப்படுகிறது