மே-8 உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது.

1901ல் முதல் அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றவரும், ரெட் கிராஸ் நிறுவனருமான ஜீன் ஹென்றி டுனாண்டுவின் சேவையை கவுரவிக்கும் வகையில், அவருடைய பிறந்த நாளான மே 8-ஆம் தேதி ஆண்டுதோறும் உலக ரெட் கிராஸ் தினமாக அனுசரிக்கப்பட்டுகிறது.

08.05.2024 புதன்கிழமை இன்று காலை 10:30 மணி அளவில் அரியலூர் அண்ணா சிலை அருகில் ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுனாண்ட் பிறந்த நாளான மே 8 உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்திற்கு வருகை புரியும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க நீர்மோர் அரியலூர் ரெட் கிராஸ் மாவட்ட கிளையின் சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு அரியலூர் மாவட்டத்தலைவர் திரு.ஜெயராமன் அவர்கள் தலைமை ஏற்க

நிகழ்வினை மாவட்ட துணைத் தலைவர் திரு.சந்திரசேகர் அவர்கள், முன்னாள் தலைவர் திரு.நல்லப்பன் அவர்கள், மாவட்ட பொருளாளர்
திரு.எழில் அவர்கள் தொடங்கி வைத்தனர்.

ஏற்பாட்டு நிகழ்வினை மாவட்டச்செயலாளர் திரு.சண்முகம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் தன்னார்வலராக நியமனத் துணைத் தலைவர் அட்வகேட் செல்வராஜ், அவர்கள், இணை செயலாளர் திரு.அசோக்குமார் அவர்கள், திரு.சகானா காமராஜ் அவர்கள், திரு.நமச்சிவாயம் அவர்கள், திருமதி.சிவபாக்கியம் அவர்கள், திரு.சடையப்பன் அவர்கள் , திரு.சேகர் அவர்கள், திரு.அருண் அவர்கள் யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஸ்டீபன் அவர்கள் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் திரு.சிவசங்கர் அவர்கள், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி சிறப்பித்தனர்.

பொதுமக்களும், தன்னார்வலர்களும் ரெட் கிராஸ் செயல்பாட்டை சிறப்பாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *