மதுரையில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

மதுரை, மே.27

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர் சுரேஷ்பாபு தலைமையிலும்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், நாஞ்சில் பால்ஜோசப் பூக்கடை கண்ணன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், தொழிற்சங்க மதுரை மாவட்ட தலைவர் எஸ் என் பாலாஜி ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் போஸ், பகுதி தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் மணிவேல், இளைஞரணி குருபிரசாத், சரவணன், அய்யர் பாலாஜி, மகளிரணி பஞ்சவர்ணம், வார்டு தலைவர்கள் குமரகுரு, கோபால், மொக்கச்சாமி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *