தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா
வழங்கினார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 273. கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்

முன்னதாக, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மின்சாரம் தாக்கி உரியிழந்த ஆண்டிபட்டி தாலுகாவைச் சேர்ந்த சண்முகத்தாய் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிதியிலிருந்து தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.96,011/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, தனித்துணை ஆடசியர் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *