காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் உள்ள எம்பயர் அவென்யூ என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு ஏற்படுவதாக புகார் வந்துள்ளது

புகாரின் பேரில் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போனது தெரிய வந்தது.

இதனையடுத்து மின்வாரிய ஊழியர் கங்காதுரை(50) டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸை மாட்டும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்

உயிரிழந்த மின்வாரிய ஊழியர் கங்காதுரையின் உடல் டிரான்ஸ்பார்மரிலே தொங்கியது

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கங்கா துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *