பக்ரீத் பண்டிகை வரும் 17-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது. அதிகாலை முதலே ஆடு விற்பனை நடைபெற்றது.

தமிழகத்தில் சேலம், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இதனால் வாரச்சந்தையில் வெள்ளாடுகளை காட்டிலும், செம்மறி ஆடுகள் விற்பனை அதிகளவு நடந்தது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் மட்டும் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

நாமக்கல் ஆட்டு சந்தையில் தீபாவளி, ரம்ஜான் பண்டிகை காலங்களில் 3 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகும் இந்த நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகளை வாங்க குறைந்த அளவே பொதுமக்களும், வியாபாரிகளும் வந்ததால் ஆடு விற்பனை குறைவாக நடைபெற்றதாக ஆடு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *