மதுரை உதவும் உறவுகள் சட்ட அலுவலகத்தில் சர்வதேச உதவும் உறவுகள் அமைப்பு மற்றும் ஐ.நாவின் கீழ் இயங்கும் சட்ட பாதுகாப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு இணைந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் களுக்கான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் மற்றும் நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை நிர்வாகிகள் வழங்கி விழிப்புணர்வு மற்றும் மாணவர்களின் கல்வி சம்பந்தமான ஊக்கம் அளிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவை அமைப்பின் தலைவர் ஜமாலூதீன் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் மகேந்திரபூபதி மற்றும் மதுரை மாவட்ட எல்.ஏ.எம்.டி. சி சங்க செயலாளர் நந்தகோபன், வழக்கறிஞர்
முருகவேல் மற்றும் சட்ட பாதுகாப்பு மற்றும் மனித உரிமை அமைப்பின் மாநில செயலாளர் மதன் ராஜ் , மதுரை மாவட்ட தலைவர் சஃபி, ஐ.எச்.ஆர்.எப். அமைப்பின் மாநில நிர்வாகிகள் பிரியா ராணி, ஹபிப், முத்துக்கிருஷ்ணன், நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *