தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டியானது போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் எதிரான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்டீபன் இயேசு பாதம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார் இதில் ஆண்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெண்கள் போன்றோர் அதிக அளவில் கலந்து கொண்டனர்
இதில் இந்த தொடர் பந்தயத்தில் பெண்கள் பிரிவில் முதல் பரிசானது சுபதா ஸ்ரீ இரண்டாம் பரிசு குமுதா மூன்றாம் பரிசு கீர்த்திகா ஆண்கள் பிரிவில் முதல் பரிசு லோகேஷ் இரண்டாம் பரிசு அன்பரசு மூன்றாவது பரிசு நவீன் குமார் வெற்றி பெற்றவர்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு ரமேஷ் தடகள அமைப்பு பிரசிடெண்ட் டி. எஸ். சரவணன் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி.சாந்தி மாவட்ட விளையாட்டு தடகளப் பிரிவு அமைப்பு செகரட்டரி திரு அருவி ஆகியோர் கலந்து கொண்டனர்