தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் பொன்மொழிகள் கூறும் போட்டிகள் நடைபெற்றது.

                      ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் . தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமை தாங்கி   போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகளை வழங்கி  பேசுகையில், மாணர்கள் விவேகானந்தர் கூறியவற்றை பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.நல்ல விசயங்களை  இளம் வயது முதலே வாழ்க்கையில் கற்று கொண்டு அதனை பின்பற்ற பழகி கொள்ள வேண்டும். என்றார்.விழாவில் விவேகானந்தர் தொடர்பான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாலினி,யோகின்லோக்கேஷ்   ஆகியோர்க்கும், விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற நந்தனா,ரித்திகா,கவிஷா,விஜய்கண்ணன் ஆகியோர்க்கும் புத்தகங்கள் பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவ,மாணவியர் ஆர்வமுடன் விவேகானந்தர் பொன்மொழிகளை எடுத்துக்கூறினார்கள். மழலை மொழியில் மாணவர்கள் பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி  நன்றி கூறினார்.விவேகானந்தர் தினத்தினையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *