எண்ணெய் பனை விவசாயிகளுக்காக
தமிழ்நாட்டில் முதல் சமதான் மையத்தை கோத்ரெஜ் அக்ரோவெட் திறக்கிறது.

சமதான் மையம் எண்ணெய் பனை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தீர்வுகளையும் வழங்கி ஆதரிக்கிறது

தஞ்சாவூர்,கோத்ரெஜ் அக்ரோவெட்டின் (GAVL) எண்ணெய் பனை தோட்ட வணிகம் (OPP) இன்று தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் தனது முதல் சமாதான் மையம் திறப்பு விழாவை அறிவித்தது. எண்ணெய் பனை விவசாயிகளுக்கு அறிவு, உள்ளீடுகள், கருவிகள், சேவைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றின் விரிவான தொகுப்பை வழங்கும் ஒரு தீர்வு மையமாக இது விளங்கும். இந்த மையம் விவசாயிகள் தங்கள் விளைச்சலை அதிகரிக்கவும் அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவும். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளித்து எண்ணெய் பனை சாகுபடியில் ஈடுபடுவது குறித்து தகவலறிந்த முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கி இந்த மையம் அவர்களின் வருமானத்திற்கு வழிவகுக்கும்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜா, கோத்ரெஜ் அக்ரோவெட் லிமிடெட் ஆயில் பாம் பிசினஸ் சிஇஓ சவுகதா நியோகி மற்றும் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கார்ப்பரேட் விவகாரங்கள் குழுமத் தலைவர் ராகேஷ் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *