மின்வாரிய பணியாளர்கள், பொறியாளர்களின் 20- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு தங்ளது பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முழக்கமிட்டனர்.