பெரம்பலூர் மாவட்டம்
”பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வழங்கி இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கின்றார்” – 2000 பயனாளிகளுக்கு ரூ.19.15 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேச்சு

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் வருவாய் துறையின் சார்பில், 2,000 பயனாளிகளுக்கு ரூ.19.15 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் தலைமையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *