மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாவட்டக் கருவூல அலகிற்குட்பட்ட ஏழுசார்நிலைக் கருவூலங்களில் ஊதியம் பெறுகின்ற, பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான வருமானவரி குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வருமானவரி இணையதளத்தில் 24 கியூ சரியான முறையில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது.

, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு வருமானவரித் துறை அலுவலர்கள் உரிய விளக்கத்தினை அளித்தனர்.
இக்கூட்டத்தில், மதுரை வருமானவரித்துறை துணை ஆணையர் மதுசூதன், வருமானவரித் துறை அலுவலர் வெங்கடேஸ்வரன், வருமானவரித் துறை ஆய்வாளர் கணேசன் , மதுரை மாவட்டக் கருவூல அலுவலர் இராமகிருஷ்ணன் , மதுரை மாவட்டக் கருவூல உதவி கருவூல அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் மதுரை மாவட்டக் கருவூல அலகில் உள்ள ஏழு சார்நிலைக் கருவூலங்களில் பணிபுரியும் உதவி கருவூல அலுவலர்கள் மற்றும் 350 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *