திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
மாற்றுத்திறனாளிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் நடைபெற்றது.

தாராபுரம்-காங்கேயம் தாலுகாவை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்

இதில் 100, க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கையின் மீது மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் செந்தில் அரசன் வட்டாட்சியர் கோவிந்தசாமி மூலம் பகிர்ந்து அளிக்கப்பட்டு மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது

திருப்பூர் மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த் ராம்குமார் பேச்சுப் பயிற்சியாளர் முகமது ஆசிஷ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் தாராபுரம்,காங்கயம் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தேவையும் நீண்ட நாள் குறைகளான இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் வீட்டு மனை பட்டா சிறு தொழில்கள் பெட்டிக்கடைகள் மற்றும் அடையாள அட்டை போன்ற தேவைகளை மனுவாக வழங்கினர்.. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதில் 20 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *