கடலூர் மாவட்டத்தில் கணவர் ஆட்சியர், மனைவி மாநகர புதிய கமிஷனராக பொறுப்பேற்ற அணு ஐஏஎஸ்…

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்த அணு ஐஏஎஸ் நேற்று மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடலூர்: நகராட்சியாக
இருந்த , கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த வாரம் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதில் பொதுத்துறையின் துணை செயலாளராக பணியாற்றி வந்த அனு ஐஏஎஸ், மாநகராட்சி ஆணையராக நியகிக்கபட்டார்.

இதனிடையே நேற்று மாநகராட்சி ஆணையராக அனு ஐஏஎஸ் பொறுப்பேற்றுக்கொண்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர் முன்னாள் ஆணையரான காந்திராஜ், தனது பொறுப்புகளை அனுவிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து அவருக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் அனு கூறுகையில், “கடலூர் மாநகராட்சி ஆணையாளராகப் பொறுப்பேற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநகராட்சியைத் தூய்மையாக மாற்ற பாடுபடுவேன்.அரசின் நலத்திட்டங்கள் ‘அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் பணிபுரிவேன். மாநகராட்சியை ஒரு சிறந்த மாநகராட்சியாக்குவதே எனது ஒரே நோக்கம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *