அகத்தி இலைக்கு மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது. இதனால் வாரம் ஒரு முறை மட்டுமே கால்நடைகளுக்கு தீவனத்தில் கலந்து கொடுக்கவேண்டும். நாமும் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ எடுத்துக் கொள்வது நமது உடல்நலத்தை பாதுகாக்க உதவும். அகத்திக்கீரை வகைகள் வேலி ஓரங்களில் பயிரிடலாம்.கீரை வகைகள் நம் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கும், உடலில் இருக்கும் சத்து குறைபாடுகளுக்கும் ஒரு சிறந்த உணவாகும். அகத்திக்கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை மிக அதிகம் உள்ளது.

அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் ஏற்படும் தேவையற்ற அரிப்புகள் நீங்கவும், வயிற்றில் உண்டாகும் புழக்களை அழிக்கவும், மேலும் தாய் பாலை அதிகரிக்க செய்யவும் மிக முக்கியமாக, நமது வாய்ப் புண்ணை நீக்கும் குணம் கொண்டது. இந்த அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை உண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள், சிறுநீர் தடையில்லாமல் போகும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.கண்கள் குளிர்ச்சி அடையும், உடல் சூடு குறையும், பித்தம் குறைந்து பித்த மயக்கம் ஆகியவை கட்டுப்படும். இதிலிருந்து அகத்திக்கீரை தைலம் தயாரிக்கப்படுகிறது. மிக முக்கியமாக பத்தியம் இருப்போர் இந்த அகத்திக்கீரையை சாப்பிடுவது ஆகாது.

அகத்திக்கீரையை ஒரு அடி முதல் 2அடி இடைவெளியில் வரிசையாக விதைத்து வளர்க்கலாம். இதன் உயரம் 3முதல் 4 அடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய புதர் போல வளர்க்க வேண்டும். இதன் மூலம் அறுவடை செய்வது மற்றும் பராமரிப்பது போன்றவை மிக எளிதாக இருக்கும். அகத்திக்கீரையை விதைகள் மூலமும், அகத்தி செடியில் வெள்ளை மற்றும் சிவப்பு அகத்தி என இரண்டு வகைகள் உள்ளன. அகத்திக்கீரை கால்நடை தீவனமாக அதேபோல கால்நடைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த உணவாக இருக்கும். இந்த அகத்திக்கீரையை ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, பன்றி பண்ணை போன்ற பண்ணை விலங்குகளுக்கும் கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் பொழுது அகத்தியின் முதிர்ந்த இலைகளை நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *