கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கார்கில் நினைவு தினம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மறைந்த முன்னாள் மாமேதை ஏ பி ஜே அப்துல் கலாம் நினைவு தினம் மற்றும் கார்கில் நினைவு தினம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் நா. ராமகிருஷ்ணன் எம் எல் ஏ கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் மற்றும் கல்லூரியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. ரேணுகா ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் கல்லூரி துணைமுதல்வர் முதல்வர் வி வாணி முன்னிலையில் நடைபெற்றது
துணை முதல்வர் வி. வாணி அப்துல் கலாம் திருவுருவப்படத்திற்கு முதல் தூவி மரியாதை செய்தார் கார்கில் வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த மாமேதை டாக்டர் முன்னாள் ஜனாதிபதி ஏ பி ஜே அப்துல் கலாம் மற்றும் கார்கில் நினைவு தினத்தை ஒட்டி பல்வேறு துறை சார்ந்த மாணவிகளுக்கு கட்டுரை போட்டி கவிதை போட்டி பேச்சு போட்டி ஓவிய போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
கல்லூரி பேராசிரியை தமிழ் துறை தலைவர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்