திருச்சி மாவட்டம், மணப்பாறை ரோட்டரி சங்கம், திருப்பூர் ரோட்டரி சங்கம், அவினாசி கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா மணப்பாறை அரசு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

வக்கீல் கிருஷ்ணகோபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் தமிழ்மணி, ரோட்டரி மாவட்ட செயலாளர் அல்லிராணி பாலாஜி ரோட்டரி மாவட்ட தலைவர் விசித்ரா செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரோட்டரி சங்க துணை ஆளுநர் சோபனா ஆனந்த் மணப்பாறை ரோட்டரி சங்க தலைவர் சரவணக்குமார் திருப்பூர் ரோட்டரி சங்க தலைவர் ரவீந்திரன் அவிநாசி ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தை பெற்ற தாய்மார்கள் 90 பேருக்கு ஊட்டச்சத்து பவுடர், பழம், டவல், உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப் பை வழங்கப்பட்டது. அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சேகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தாய்ப்பால் மணப்பாறை அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது. மணப்பாறை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *