பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மேல வழுத்தூர் ஸ்ரீ செல்லமுத்து காளியம்மன் பால் விநாயகர் ஆலய பால்குட முளைப்பாரி திருவிழா..
திரளான பக்தர்கள் பால்குடம் முளைப்பாரி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேல் வழுத்தூர் வடக்குத் தெரு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செல்லமுத்து காளியம்மன் பால் விநாயகர் பாலமுருகன் ஆலய பால்குட முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் மேலவழுத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் பாபநாசம் காங்கிரஸ் வட்டார தலைவருமான தமிழ்செல்வன் மற்றும் அதனைசுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேல வழுத்தூர் , நாட்டாமைகள் பூக்கொல்லை தெரு, கொடிக்கால் தெரு, வடக்கு காளியம்மன் கோவில் தெரு ஜெகன் பாலு சரவணன் சதீஷ் பட்டாபிராமன் கலைவாணன் ,மணிகண்டன் ராஜேந்திரன் நாகராஜ் பிரபாகரன்ராஜ் தமிழரசன் மற்றும் கிராமவாசிகள்பஞ்சாயத்து தலைவர், மகளிர் சுய உதவி குழுக்கள், இளைஞரணி செய்திருந்தனர்.