கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் 78 – வந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு மாறுவேட போட்டி….

200 கற்கும் மேற்பட்ட மாணவகர்கள் தேசியத் தலைவர்கள் போல மாறுவேடத்தில் அசத்தினர்….

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 78வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு எல்கேஜி வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு மாறுவேட போட்டி பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. மாணவ மாணவியர்கள் தங்களது குழந்தை பருவத்திலேயே மிகுந்த தேசப்பற்றுடன் தேசத்தை பற்றியும், தேசத்திற்காக போராடிய போராட்ட வீரர்கள் பற்றியும், தேச தலைவர்கள் பற்றியும் தேசிய விலங்கு, தேசிய பறவை ஆகியவற்றைப் பற்றியும் அறியும் விதமாக ஏற்பாடு செய்திருந்த இந்த மாறுவேட போட்டியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் குழந்தைகள் பாரதியார், வேலு நாச்சியார், ஜவஹர் லால் நேரு, அம்பேத்கர், மகாத்மா காந்தி போன்று பல்வேறு வேடங்களில் வந்து தேசத்தலைவர்களை தம் கண்முன்னே நிறுத்தினார்கள். மேலும் தேச தலைவர்களின் வாக்கியங்களை வீரத்தோடும், சுதந்திர உணர்வோடும் உச்சரித்து அனைவரின் மனதிலும் சுதந்திர போராட்டத்தை நினைவுபடுத்தினார்கள். தொடர்ந்து மூன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டியில் மாணவ மாணவிகள் பல்வேறு வடிவங்களில் தேசிய கொடியினை வரைந்து அழகாக வண்ணம் தீட்டினர். நான்காம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தேசிய பறவை மயிலினை வரைந்து அழகாக வண்ணம் தீட்டினர். ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தேசிய விலங்கான புலியினை வரைந்து வண்ணம் தீட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பாராட்டு சான்றிதழினை பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியர்களை வாழ்த்தினார்கள். முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *