பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் ,வேப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலோடு, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.செல்வமணி தலைமையில் கழகத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், கீழப்பெரம்பலூர் கிளைக் கழகச் செயலாளர் முல்லைநாதன், வேப்பூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் தொட்டி, கிளைக் கழகத் துணைச் செயலாளர் ஷேக் முகமது மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.