அலங்காநல்லூர், –

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்த மாவட்ட மகளிர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மகளிரணி மாநில துணை செயலாளர் புளியம்மாள், மாநிலத் துணைச் செயலாளர் எல்லாளன், ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிந்தனைவளவன், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், துணை செயலாளர் அழகுமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரியதங்கம், ராதா, மணிமொழியன், பூமி, சக்திவேல் பாண்டியன், தமிழ்ச்செல்வன், தமிழன், கரிகாலன், அலங்கை தங்கராசு, தமிழழகன், பாலமுருகன், ஜோதி, மகளிரணி இந்திராணி, தமிழ்செல்வி, ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒன்றிய மகளிரணி தன்மானசெல்வி ஒருங்கிணைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *