திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குடவாசல் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. கரூர், ஈரோடு, சேலம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7,639 ரூபாய்க்கும்,குறைந்த பட்ச விலையாக 6,809 ரூபாய்க்கும்,சராசரியாக ரூபாய் 7,107 க்கும் ஏலம் போனது.பருத்தி மறைமுக ஏலத்தில் 43.31குவிண்டால் பருத்தி 3,9,158 ரூபாய்க்கு ஏலம் போனது.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியிணை நன்கு உலர்த்திக் கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது,

சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெறஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *