தென்காசி மாவட்டம்
பன்பொழி கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குற்றாலம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்தின விழா
கொண்டாட பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். குற்றாலம் ரோட்டரி தலைவர் கை. முருகன் தலைமையேற்றர் . ரோட்டேரியன்கள் கண்ணன் இறைவணக்கம் பாடினார்,

மருதையா நான்குவழி சேதனை வாசித்தார். செயலாளர் முருகன், பொருளாளர் திருஇலஞ்சி குமரன், முன்னிலை வகித்தனர். விழாவில் ஆசிரிய பெருமக்களுக்கு ரோட்டரி சார்பாக ஆசிரியர்கள் தானலட்சுமி, பாபுவேலன் , ரமேஷ் , அங்காளபரமேஸ் வரி இந்திராணி என்ற கோமு, கோமதி, ஆபிதாபீவி, ஜோதிப் பிரியா, சுதா ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து மாணாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவக ஆசிரியர் பாபுவேலன் நன்றி கூறினார்.
நாட்டுபன்னுடன் விழா இனிதே நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *