கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் ஊராட்சிக்குட்பட்ட தெண்பெண்ணை ஆற்றில் மீன்குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீனவளம் மற்றும் மீனவர் நளத்துறை சார்பாக மீன்வளத்தினை அதிகரிக்கும் வகையில், 1.80 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகளை ஆற்றில் இருப்பு செய்யும் பணிகளை  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

கிருஷ்ணகிரி மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகள் தென்பெண்ணையாறு மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரூர் தெண்பெண்ணை ஆற்றில் 1.80 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. இதனால் ஆறுகளில் மீன்வளம் பெருகி ஆற்று படுகையில் உள்ள மீனவர்களுக்கு அறுவடை காலங்களில் உதவியாக இருக்கும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மீன்வளர்துதறை உதவி இயக்குநர் ரத்தினம், ஆய்வாளர் கதிர்வேல், ஆய்வாளர் பவதாரண்யா மற்றும் வருவாய்துறையினர், நீர்வள ஆதாரத்துறையினர், மற்றும் மீனவ பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *