தூத்துக்குடி அரசு பெண் ஊழியர்களுக்கு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
தேசிய சட்டப்பணிகள் இன் ஆணைக்குழு மற்றும் மாநில சட்ட்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் இன்று 07.09.2024 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாம்ஸ் ஹாலில் வைத்து போக்சோ சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சணை சட்டம், பணியிடத்தில் பாலியல் சீண்டல் தடுப்பு சட்டம் மற்றும் பல சட்டங்கள் குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மேற்படி முகாமில் மூத்த வழக்கறிஞர்கள் திருமதி. S. சொர்ணலதா, M. A., M. L., அவர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த மூத்த பட்டியல் வழக்கறிஞர் .M. நர்மதா தேவி B. A., B. L., அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் /மூத்த உரிமையியல் நீதிபதி C. கலையரசி ரீனா, M.L., அவர்கள் முன்னிலை வகித்து தலைமையுரை ஆற்றினார்.
மேற்படி கருத்தரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் அரசு ஊழியர்கள் 60-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மேற்படி கருத்தரங்கில் தங்களுக்கு உண்டான சட்டம் சம்மந்தமான சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
சட்ட உதவி மைய நீதிபதி அவர்கள் தனது தலைமை உரையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அன்றாட வாழ்வில் மற்றும் பணியிடத்தில் சந்திக்கின்ற பாலியல் பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு தங்களை காத்துக்கொள்ளலாம் என்றும், போக்சோ சட்டம் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சணை சட்டம் குறித்தும், பெண்கள் ஆடை வடிவமைப்பில் உண்டான பிரச்சனைகள் குறித்தும், இதன் மூலம் ஏற்படும் பிரச்சனையில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாக்கலாம் என்பது குறித்தும், தேசிய சட்ட உதவி எண். 15100 குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும், குழந்தைகள் பாலியல் பிரச்சனை குறித்தும், 1098 செயல்பாடு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனது செல்ஃபோன் பயன்பாட்டில் உண்டான ஆபத்து குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாக்கலாம் என்பது குறித்தும், குழந்தைகள் இந்த வயதில் படிப்பு ஒன்று மட்டுமே மிக முக்கியம் எனவும் விளக்கமாக மேற்படி கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.மேற்படி கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் திருமதி. J. ஜெப சோபனா, மற்றும் திருமதி. S. R. மினிலா, அவர்கள் வரவேற்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார்கள்.