திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலைசிறந்த சக்தி ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இவ்வாலயத்தில் வருடம் தோறும் நவராத்திரி திருவிழா கொழு அலங்காரத்துடன் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டு நேற்று (12-ஆம் தேதி) பத்தாம் நாளான விஜயதசமியை முன்னிட்டு அம்மன் ராஜா அலங்காரத்தில் காட்சி அளித்தார்.மாலை ஆறு மணி அளவில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்பு போடுவதற்காக வீதி உலா காட்சி புறப்பட்டார்,

இதேபோன்று வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நேற்று அம்மன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.மாலை குதிரை வாகனத்தில் அம்மன் அம்பு போடுவதற்காக வீதி உலா காட்சியில் புறப்பட்டார்.இதே போன்று வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மாரியம்மன் நேற்று விஜயதசமியை முன்னிட்டுஅம்மன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.மாலை குதிரை வாகனத்தில் அம்மன் அம்பு போடுவதற்காக வீதி உலா காட்சி புறப்பட்டார்.

இதேபோன்று வலங்கைமான் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அம்மன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலை குதிரை வாகனத்தில் அம்மன் அம்பு போடுவதற்கு வீதி உலா காட்சி புறப்பட்டார்.

இந்த நான்கு சாமிகளும் வலங்கைமான்- பாபநாசம் ரோட்டில் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து லாயம் பகுதியில் ஒரே இடத்தில் நான்கு சுவாமிகளும் அம்பு போட்டனர்.

மாலை முதல் வலங்கைமான் பகுதியில் பலத்த மழை பெய்ததால் மழையில் நனைந்தபடியே சுவாமிகள் அம்பு போட்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் எஸ்.ராஜராஜேஸ்வரன், தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி,அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், ஆண்டி தோப்பு எஸ். நடராஜன் குடும்பத்தினர், மாடாகுடி ஆசிரியர் எஸ். செங்குட்டுவன் குடும்பத்தினர்,வலங்கைமான் பேரூராட்சி மன்ற உறுப்பினர் க. செல்வம் குடும்பத்தினர் உள்ளிட்ட உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *