திண்டுக்கல் N.S.நகர் பகுதியை சேர்ந்த சபரீஷ்(26) இவருக்கு திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி வேடசந்தூர்,பூத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த அருண்பாலன் என்பவர் ரூ.36.20 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் சபரீஷ் புகார் அளித்தார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குஜிலியம்பாறையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சமும், சகாயராஜ் என்பவரிடம் ரூ.8 லட்சம் லஞ்சமும் மோசடி செய்ததாக தெரியவந்ததை அடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அருண்பாலன், அவரது மனைவி இளையராணி, தந்தை மாணிக்கம், ஓசூரை சேர்ந்த லவக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அருண்பாலனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *