ராஜபாளையத்தில் காவல்துறையின் மினி மாராத்தான் போட்டி!

விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி ஆலோசனையின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீமான் தலைமையில் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது காந்தி சிலை ரவுன்டானாவில் போட்டியை ஆய்வாளர் சீமான் கொடியசைத்து துவக்கி வைத்தார்

மூர்த்தி ராணுவ பயிற்ச்சி அகாடமி மாணவர்கள் மற்றும் நாடார் மேல்நிலை பள்ளி மாணவர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர் ரயில் நிலையம் நேரு சிலை தென்காசி ரோடு வழியாக 2.5 கிமீ.ரவுன்டானா வந்து நிறைவு பெற்றது முடிவில்
முதல் பரிசு பெல்ஜின் இரண்டாவது வினோத்
மூன்றாவது ராகவேந்தர் ஆகியோருக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது மூவரும் மூர்த்தி ராணுவ பயிற்ச்சி அகடாமி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *