தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் வியாபாரிகள் தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில்
தென்காசி நகராட்சி துணை தலைவர்
கே.என். எல் சுப்பையா, மீது நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

கூட்டமைப்பின் துணை தலைவர் நம்பி தலைமை தாங்கினார் சங்க நிர்வாகிகள் முகைதீன், கோபிநாத், லெட்மணன், மெடிக்கல் கணேஷ். செந்தில், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வியாபாரி சங்க நிர்வாகிகள் முகமது யாகாஸ் , வீரமணி, சுப்பு முகமது நைனார் எஐடிசி சுப்பையா லட்சுமணன் சங்கர் திமுக பிரமுகர் மாரியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்கள்

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு, மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு ஆர்பாட்டம் இது ஆர்பாட்டம்
வியாபாரிகளின் ஆர்பாட்டம். கெடுக்காதே கெடுக்காதே வியபாரிகளின் வாழ்வாதரத்தை கெடுக்காதே
என கண்டன கோஷங்கள் எழுப்பபட்டன

இந்த ஆர்பாட்டத்தில் சுந்தர பாண்டியன், இசக்கி பாண்டியன்,
முகமது யகோப் இசக்கி , கோபி,சொள்ளமுத்து, சங்கர்
பகர்கின் அலி மற்றும் வியாபாரிகள் மாத சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *