வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது, இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் இன்று (13.11.2024) பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.