தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக வக்ப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து
மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்..

மாவட்டத் தலைவர் அஷ்ரப் அலி தலைமையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு
நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சபீர் அலி அவர்கள் பங்கேற்று கண்டன
உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜநுருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தனது
கண்டன உரையில் வக்ப் வாரிய திருத்தச்சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை
அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது, வக்ப் வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும்
அபகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவதென்பது சங்க பரிவாரங்களின் முஸ்லீம் வெறுப்பு செயல்திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும் என்றும் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர்
நிலங்கள் பாசிச பாஜக அரசின் கண்களை உறுத்துகின்றன, அவற்றை அபகரித்து அதானி, அம்பானி உள்ளிட்டவர்களுக்கு
வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் பாஜக சதி செய்கிறது என்றும் கூறினார்.

இத்தனை குளறுபடிகளோடு வந்துள்ள இந்த சட்டத்திருத்த மசோதாவை ஆளும் ஒன்றிய அரசு கட்டாயம் திரும்பபப் பெற்றே
ஆக வேண்டும், அதுவரை எமது போரட்டங்கள் கடும் வீரியத்துடன் தொடரும் என்று கூறினார்.

இந்தப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *