கமுதி நரிக்குறவர்கள் காலணியில் தார்ப்பாய்களை கொண்டு வீடு அமைத்துக் கொடுத்த தமிழக வெற்றிக் கழக மருத்துவரணி தலைவர் Dr. கார்த்தி கேயன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நாராயணபுரத்தில் உள்ள நரிக்குறவர் காலணியில 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.தற்போது பெய்த கன மழையினால் சிலர் வீட்டில், ஓலை கிழிந்து மழை நீர் வீட்டுக்குள் வருவதை அறிந்த தமிழக வெற்றி கழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன், தங்கள்கட்சி நிர்வாகிகளைக் கொண்டு புதிய தார்ப்பாய்களை மாற்றி டென்ட் அமைத்து கொடுத்தார்.

மேலும் தற்காலிகமாக வசிக்கும் அனைத்து வீடுகளுக்கும் அடுத்த கட்டமாக புதிய தார்பாயிகள் மாற்றி தருகிறேன் என்றும் நரிக்குறவர் மக்களிடம் உறுதி அளித்தார்.இதில் கழக நிர்வாகிகள் Dr.பத்மா கார்த்திகேயன், விவசாய அணி தலைவர் காளிமுத்து,அருண், மணிகண்டன் ,வெங்கடேஷ் சோலைராஜா வீரபொம்மு அய்யனார் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *