இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையற்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு வீட்டு மனைப்பட்டா, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, தாட்கோ லோன், உள்ளிட்ட 8 துறைகளின் சார்பில் 370 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 86 இலட்சத்து 20 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *