சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
பெரியஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அ.இ.அ.தி.மு.க கிளைக் கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் செந்தில்குமார் ,ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் பாலமுருகன்,ஆறுமுகம், மனோகரன்,
கோபால்,தவமணி, உள்பட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
