எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே லாரி- இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற மீனவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முகுந்தன் (32). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் இருந்து சீர்காழி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது எதிரே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மீன் தீவனம் ஏற்றிச் சென்ற லாரியை முந்தி செல்லும் பொழுது லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே முகுந்தன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *