அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மேற்கு ஒன்றிய செயலாளர் ரகு, வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெய்பாண்டி, மாவட்ட இலக்கிய அணி நீதி, நகர் செயளாலர் ராஜபிரபு, முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவை தலைவர் செல்வம், ஒன்றிய இணை செயலாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் வேல்முருகன், கல்லணை சந்திரசேகர், மோகன், பண்ணைகுடி அசோக், மகளிரணி ஈஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மணியஞ்சி ஊராட்சியில் ஊராட்சிக் கழகச் செயலாளர் ராஜா ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தண்டலை ஊராட்சி செயளாலர் மாதவன், ராஜேஷ், சுரேஷ், மகளிரணி ஆனந்தி, ஈஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *